Posts

Showing posts from June, 2011

பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்குமா?

Image
                           அவன் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறான்.அதற்காக புத்தகம் வாங்கி படித்துக்கொண்டிருந்தான்.இன்னும் தேர்வுக்கு ஒருமாதம் தான் இருக்கிறது.புத்தகத்தில் வாங்கிய கடையின் பெயர் அச்சிடப்பட்டிருந்த்தை பார்த்தவுடன் நண்பன் முகம் நினைவுக்கு வந்த்து.அவன் தான் இந்த புத்தகத்தை வாங்கச் சொன்னான்.அப்போது, ” பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும்டா! ‘ ’ என்று சொன்னதும் அவன் தான்.                              அவன் புத்தகத்தை படிப்பதை நிறுத்திவிட்டு எதையோ உற்றுப்பார்த்தான்.அவனுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு ஏற்பட்ட்து.முகம் மாறியது.தனது தாய் தந்தை மீது வெறுப்பு வந்த்து.இவர்களுக்குப்போய் ஏன் மகனாக பிறக்கவேண்டும்.பிறகு தன் மீதும் ஆத்திரம் ” பன்னிரெண்டாம் வகுப்பில் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்திருந்தால் டாக்டராகவோ...

சில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்?

Image
சில நாட்களில் அவ்வளவு திருப்தியாக நாம் உணர்வதில்லை.மனசு ஒரு மாதிரியாக இருக்கிறது.ஆனால் சொல்லத்தெரிவதில்லை.எதிலும் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.வெற்றியென்றால் சந்தோஷப்படுவதும்,தோல்வி என்றால் சங்கடமாவதும் இயல்பாக உள்ள ஒன்று.ஆனால் காரணமே இல்லாமல் மனநிலையில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.                                 இது ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொதுவாக இருக்கும் விஷயம்தான்.ஆண்களைப்பற்றி பெண்கள் திடீரென்று இவருக்கு என்ன ஆச்சு என்று குறைபட்டுக்கொள்வது அதிகமில்லை.ஆண்களுக்கு மட்டும் எவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்தாலும் இது புரிவதேயில்லை. ” அடிக்கடி இப்படி ஆயிடறா! ” என்பார்கள்.                                  குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மன நிலையில் மாற்றம் உருவாகிறது என்பது உலக...

இனி இணையவழி கள்ள உறவுகள் குறையுமா?

Image
                                 சமூக வலைத்தளங்கள் மூலம் கள்ளக்காதல்கள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தேன்.இது ஆச்சர்யமான ஒன்றல்ல என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.சாட்டிங் மூலம்.மெயில் வழியாக நட்பு தோன்றி வேறுவடிவம் பெறுவது இப்போது சாதாரணமாக ஒன்றாகியிருக்கிறது.                                  இங்கே தடைகள் எதுவுமில்லை.எப்படியும் பேசலாம்.ஆபாச சொற்களை பயன்படுத்தி திருப்தி அடைவது பற்றி( corprolalia) உளவியல் கோட்பாடுகள் இருக்கின்றன.ஆபாச சொற்களை எழுதுவதிலும்,பேசுவதிலும் நாட்டம் கொள்பவர்கள் இவர்கள்.சில வகை மன நோயாளிகளிடம் இந்த போக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.               ...

தூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா?

Image
என் பாட்டி ஒருவரிடம் உறவுக்கார அண்ணன் ஒருவன் கூறினான்."அந்த பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆவது போல கனவு கண்டேன்". பாட்டியின் மறுமொழி "அது கனவில்லை உன் நெனப்பு " அண்ணா பதில் பேசவில்லை.அதே பாட்டியுடன் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் சொன்னார்,''சுவர் இடிந்து விழுவதுபோல க்கனவு கண்டேன் என்னவென்று தெரியவில்லை.பாட்டி சொன்னார் "உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா? ஏதாவது கெட்ட சம்பவம் நடந்தாலும் நடக்கும்''.                                                                      இதை நான் வித்தியாசமாக உணர்ந்தேன்.அதன் பின்னர்கனவுகள் பற்றி  ஏராளமான கிராமப்புற நம்பிக்கைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.அழுத்தம...

சாருவும் தமிழ்ப்பெண்களும்

Image
                                                                                          எதையாவது எழுதிக்கொண்டிருப்பவனுக்கு(!) சமகால நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் தோன்றாமல் இருக்காது.அப்படித்தான் முள்வேலி உறுத்தியபோது “தமிழன் என்ற சொல் குற்ற உணர்வு தரும் சொல்லாகிவிட்ட்து ” என்று எழுதினேன்.அதற்கு தொப்பிதொப்பி போட்ட கமெண்ட் “ வேண்டாம் மீண்டும் எழுவோம் தமிழன் என்றால் உலகே அதிசயிக்கும் ”                             ...

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Image
ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு , மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.                             மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை , மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.                   ...

மற்றவரை குற்றம் சாட்டுவதே பெண்களின் குணமா?

Image
                                 பாலிடெக்னிக் ஒன்றில் விழாவுக்கு போயிருந்தேன்.பார்வையாளராகத்தான்.நண்பர் அக்கல்லூரியின் முதல்வர் என்பதால் அழைத்திருந்தார்.ஒரு பெரிய மனிதர் பேசிக்கொண்டிருந்தார். ” எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டிருக்க்க்கூடாது! பெண்கள் தான் அப்படி இருப்பார்கள். ’’ மாணவர்களுக்கு அறிவுரைகள் தந்தவாறு இருந்தார்.                                   பெண்கள்தான் மற்றவரை குற்றம் சாட்டுவார்களா? ஆண்கள் குற்றம் சாட்டமாட்டார்களா? தனது தவறுகளுக்கும்,தோல்விக்கும் தன்னை விடுத்து இன்னொருவர் மீது பழி போடுவது மனிதர்களுக்கு பழக்கமான விஷயம்தான்.தான் மிகச்சிறந்தவன்,அதி புத்திசாலி ,எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை! அடுத்தவர்கள்தான் காரணம் என்பவர்களை பார்த்திருக்க...

இரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.

Image
                                சிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் இந்தியா போன்ற நாட்டில்! அழகும் அங்கீகாரமும் சிவப்புக்குத்தான் இருக்கிறது.மற்ற திறமையால் சிலர் பெயர் பெற்றிருக்கலாம்.கலர் அப்படியில்லாமல் இருப்பவர்கள் தாழ்வு மனப்பானமையால் பொசுங்கிப் போய்விடுகிறார்கள்.                                  நானும் கொஞ்சம்(?!) கலர் குறைவுதான்.எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்,குறைந்தபட்சம் முகம் மட்டுமாவது சிவப்பாகிவிட்டால்? நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.மீசை அரும்பிக்கொண்டிருக்கிறது.அப்போதுதான் அந்த விளம்பரத்தைப்பார்த்தேன்.            ...

படிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

Image
                                  அவன் போதையில் இருந்தான்.சுற்றி ஒரு கூட்டம்.பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பாக்கெட்டை பிரித்து நாக்குக்குக்கீழே வைத்துக்கொண்டான். ’ இவருக்குக் கீழே முப்பதுபேர் வேலை செய்கிறார்கள் ’ என்றார் அறிமுகப்படுத்தியவர்.கை குலுக்க நீட்டியபோது எனக்கு தயக்கமாக இருந்த்து.வேறு வழியில்லாமல் கை குலுக்கிய பின் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.மூன்று பட்டங்களும்,மூன்று பட்டயங்களும்( diplamo) அவனது பெயரின் பின்னால் இருந்தன.                                                                 ...

கற்பழிப்புகள் -ஒரு சமூக பார்வை.

Image
அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற் கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலைசெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறைகளை தாண்டவேண்டும...

மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.

Image
அந்த பெண்ணுக்கு சுமார் இருபது வயதுதான் இருக்கும்.ஓரளவேனும் படித்திருக்கவேண்டும்.மருந்துக்கடையில் சென்று அவர் மாத்திரை கேட்கிறார்.(இதைப்பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட்து.இதுவே அபாயகரமான போக்கு) ’ .புண்ணுக்கு மருந்து கொடுங்கள்! ” என்று கேட்டவுடன் கடையில் இருந்தவர் “ யாருக்கு? என்று விசாரிக்கிறார்.பெண் மாற்றி மாற்றி ஏதேதோ சொல்ல கர்ப்பிணியாக இருக்கிறாரே என்று யோசித்து கடையில் இருந்த பெண் பணியாளரை விட்டு அவரை விசாரிக்கச் செய்த்தில் ,புண் இருப்பது அவருக்குத்தான் என்பதும் ,பிறப்புறுப்பில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.                               கடையில் இருந்தவர்கள் உண்மையில் அதிர்ச்சியாகி பெண்ணுக்கு விளக்கியிருக்கிறார்கள்.(கொஞ்சம் மனசு உள்ளவர்களாக இருந்த்தால்) அவர் கர்ப்பிணியாக இருப்பதால் முறையாக மருத்துவரை பார்ப்பதே நல்லது என்று அனுப்பிவிட்டார்கள்.கர்ப்பிணி என்பதால் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கூட தரக...