குடும்ப பிரச்சினைகள் சந்தி சிரிப்பது எப்படி?
தம்பதிகள் வேலை கிடைத்து புதியதாக அந்த ஊரில் குடியேறினார்கள்.குடும்பம் என்றால் சில நேரங்களில் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விட்ட்து.கணவர் கோபத்தில் வெளியே போனவர் வெகு நேரமாகியும் வரவில்லை.செல்போனையும் விட்டுவிட்டு போய்விட்டார்.
கணவர் வேலை செய்யுமிட்த்தில் ஒருவர் நல்ல பழக்கம்.கணவர் செல்லிலிருந்து அவருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்.வீட்டில் சண்டை நடந்த விஷயத்தை ஒரு வார்த்தை விடாமல் முழுமையாக கொட்டி தீர்த்துவிட்டார்.அவரும் தேடிப்பார்ப்பதாக சொல்ல,சிறிது நேரத்தில் கணவர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அடுத்த நாள் கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும்போது,நான்கு வாலிபர்கள் கமெண்ட் அடித்து சிரிப்பது காதில் விழுந்த்து.மானம் போன அதிர்ச்சியில் கூனிக்குறுகிப் போனார்.அந்த வார்த்தைகள் அவர்களது சண்டையில் கணவன் அப்பெண்ணுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தைகள்.பையன்கள் வீட்டு வெளியில் இருந்து கேட்டிருப்பார்கள் என்று நினைத்தார்.ஆனால் அது உண்மையல்ல!
கணவருடன் பணி புரிபவரிடம் பேசிய விவரத்தை அவர் அதே வீதியில் உள்ள அவரது உறவினருக்கு சொல்லிவிட்டார்.அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பையன் தான் கமெண்ட் அடித்து சிரித்த்து.வழியில் காதில் கேட்ட்தால் அவரைப் பற்றி தெரிந்து போனது.இல்லாவிட்டால் அவரிடம் தொடர்ந்து எல்லாமும் பகிரப்ப்ட்டு இருக்கும்.
நல்ல குடும்பங்களில் வீட்டு விவகாரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.அது அவசியமானதும் அல்ல.நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.உரிய ஆலோசனை கிடைக்காத சுற்றம் இருக்கும்போது சிலர் நல்ல யோசனை கிடைக்கும் என்று மற்றவர்களிடம் சொல்கிறார்கள்.
ஒருவரது ரகசியத்தை காப்பாற்றுவது என்பது சீரிய ஒழுக்கம்.பலருக்கு வெளியில் சொன்னால் ஏதேதோ தெரிந்து வைத்திருக்கிறான் என்று கேட்பவர்கள் மதிப்பார்கள் என்று உளறி விடுகிறார்கள்.நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும்,நண்பர்களை எதிரிகளாக்குவதும் காலம் செய்யும் மாயம்.
எந்த ஒரு தனி மனிதனும் தனது பிரச்சினைகளையும்,ரகசியங்களையும் யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.அதிலும் முன்னுரிமை கொடுத்து பட்டியல் இருக்க வேண்டும்.குடும்ப்ப் பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும்,அலுவலக பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும் உரையாடலாம்.
நன்றாக பேசுகிறார்கள்,பார்க்க நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நம்புவது ஆபத்தில் முடியும்.பொதுவாக குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய உறவினர்களே பாதுகாப்பானவர்களாக இருக்க முடியும்.



Comments
Post a Comment