ஓட்டு போட பணம் வாங்கினால் ஆபத்து


பொதுத் தேர்தல்கள் பணம் சம்பாதிக்கும் பருவ கால தொழிலாக மாறியிருக்கிறது.பத்திரிகை விளம்பரம்,அச்சகங்கள்,டிஜிட்டல்பேனர் தயாரிப்பவர்கள்,வாடகை கார்,வட்டம்,மாவட்ட்த்திற்குத்தான் சீசன் தொழிலாக இருந்து வந்த்துதேர்தல்.தற்போது ஒவ்வொரு வாக்காளனுக்கும் அவன் குடும்பத்துக்கும் என்றாகிவிட்ட்து.

ஓட்டு போட்ட வாக்காளர் அவர் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.அதை அச்சடித்து தரலாமா என்பதை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிபுணர் குழு அமைத்திருக்கிறது.குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள்.

வாக்களித்தவர்களுக்கு தான் எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டோம் என்பது தெளிவாக தெரிந்து விடும்.நல்லதுதான்.ஆனால் இப்போது ஓட்டை விற்கும் காலத்தில் பணம் கொடுத்தவர்கள் ஆதாரமாக ஒப்புதல் சீட்டை ஒப்படைக்க்க் கோரலாம்.இரண்டு,மூன்று வேட்பாளர்களிடம் பணத்தை கறக்கும் புத்திசாலி ஏஜண்டுகள் வசமாக மாட்டிக்கொள்வார்கள்.

அரசியல் கட்சிகள் மேற்கண்ட காரணங்களுக்காக இந்த நடைமுறையை வரவேற்கலாம்.பிரிண்ட் அவுட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டால் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்கள் தயங்குவார்கள்.கொடுக்கும் காசுக்கு ஓட்டு உறுதி.வெற்றி வாய்ப்பில்லாத வேட்பாளருக்கு கறுப்புப் பணம் மிச்சம்.

வேட்பாளருக்கு எதிர்கோஷ்டியைச்சேர்ந்த வட்டம்,ஒன்றியம்,கிளை எல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவார்கள் அவர்களின் எண்ணம் இத்தகைய நடைமுறை வந்தால் ஈடேறாமல் போகும்.எல்லா கட்சிகளிடமும் “உனக்குத்தான் என் ஓட்டுஎன்று தொழில் செய்பவர்கள் நிலை சங்கடம்.

அச்சடித்த ஒப்புதல் சீட்டு வழங்குவதில் அரசியல் கட்சிகளுக்கே நன்மை அதிகம்.சாதாரண வாக்காளன் எப்போதும் அப்பாவிதான்.போகட்டும் அவன் எப்போதுதான் வாழ்ந்தான்?

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்