Posts

Showing posts from January, 2011

வலைப்பதிவுகள்,பதிவர்கள் மற்றும் நான்

2008- ம் ஆண்டு குமுதத்தில் பிரபலமான வலைப்பதிவுகள் பட்டியல் போட்டிருந்தார்கள் . அதைப்பார்த்து விட்டு அந்த தளங்களுக்கு சென்றேன் . இட்லி வடை , பி . கே பி . ஆகியன . அவற்றைத் தான் படித்து வந்தேன் . பிறகு ஆனந்த விகடன் மூலமாக சில பதிவுகள் அறிமுகம் . டாக்டர் ஷாலினியின் பதிவுகள் போன்றவை . வேறு விபரங்கள் எனக்கு தெரியாது . இணையத்தில் இலவசமாக எழுத முடியும் என்றோ , யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதெல்லாம் தெரியாது . ஒரு நாள் create blog மீது தொடப்போக நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.ஒரு வருட்த்திற்கும் மேலாக அப்படியே கிடந்த்து.எப்போதாவது திறந்து பார்ப்பேன்.அவ்வளவுதான்.தமிழில் எழுத்முடியும் என்பது கூட தெரியாது.தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பது அதனால்தான்.கூகுள் ஒலிபெயர்ப்பு,மொழி பெயர்ப்பும் தெரியாது. புதிய தலைமுறை இதழொன்றில் இ-கலப்பை பற்றி படித்தேன்.அதைத் தேடப்போய் ஒவ்வொன்றாக தெரிந்த்து.பதிவு ...

திருமணத்தில் தவிர்க்க வேண்டிய சடங்கு

Image
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்பட்ட்து.எங்கே முடிகிறதென்று யாரும் சொல்லவில்லை.பல இன்று நீதிமன்றத்தில் முடிகிறது.கல்யாண சடங்குகள் பெரும் செலவு வைப்பதாக இருக்கிறது.எளிமை தேவை.சில சடங்குகள் மதம் சார்ந்தவை.அவரவர் விரும்பியவாறு இருந்து விட்டுபோகட்டும். தவிர்க்க வேண்டிய சடங்கு ஒன்று இருக்கிறது.அவ்வளவாக கவனித்திருக்க மாட்டீர்கள்.பெரும்பாலான திருமணங்களில் நான் பார்த்து வருந்தியிருக்கிறேன்.இனி உடனிருந்து கவனித்து பாருங்கள்.அந்த சடங்கு-பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்வது.சம்பந்திகள் முறுக்கிக்கொள்வது. நண்பர் ஒருவருக்கு திருமணம்.முந்தைய இரவு நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து.விருந்தில் தயிர் தீர்ந்து விட்ட்தென்று சத்தமிட ஆரம்பித்து விட்டார்.பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்து விட்டார்கள்.அது இயல்பான ஒன்றுதான்.இதற்குத்தான் இந்த இடமே வேண்டாமென்றேன் என்றார்.எனக்கு ஆச்...

ஓட்டு போட பணம் வாங்கினால் ஆபத்து

Image
பொதுத் தேர்தல்கள் பணம் சம்பாதிக்கும் பருவ கால தொழிலாக மாறியிருக்கிறது.பத்திரிகை விளம்பரம்,அச்சகங்கள்,டிஜிட்டல்பேனர் தயாரிப்பவர்கள்,வாடகை கார்,வட்டம்,மாவட்ட்த்திற்குத்தான் சீசன் தொழிலாக இருந்து வந்த்துதேர்தல்.தற்போது ஒவ்வொரு வாக்காளனுக்கும் அவன் குடும்பத்துக்கும் என்றாகிவிட்ட்து. ஓட்டு போட்ட வாக்காளர் அவர் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.அதை அச்சடித்து தரலாமா என்பதை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிபுணர் குழு அமைத்திருக்கிறது.குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள். வாக்களித்தவர்களுக்கு தான் எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டோம் என்பது தெளிவாக தெரிந்து விடும்.நல்லதுதான்.ஆனால் இப்போது ஓட்டை விற்கும் காலத்தில் பணம் கொடுத்தவர்கள் ஆதாரமாக ஒப்புதல் சீட்டை ஒப்படைக்க்க் கோரலாம்.இரண்டு,மூன்று வேட்பாளர்களிடம் பணத்தை கறக்கும் புத்திசாலி ஏஜண்டுகள் வசமாக மாட்டிக்கொள்வார்கள். அரசியல் கட்சிகள் மேற்கண்ட காரணங்களுக்காக இந்த நட...

எங்கே போனார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள்?

Image
மேலாளர் ஒருவருக்கும் பணியாளர்கள் சிலருக்கும் தகராறு.ஒரு பணியாளருக்கு ஆத்திரம் அதிகமாக,மேலாளரை ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறி.பல இடங்களில் விசாரித்து ஒரு புலனாய்வு பத்திரிகை நிருபரை பிடித்தான்.மேலாளரின் ஊழலையும் அத்துமீறலையும் விவரித்தான். அடுத்த சில நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நிருபருடன் அலைந்தான்.ஆதாரங்கள் தயாரானது.மூன்று வேளையும் பத்திரிகையாளருக்கு சாப்பாடு,சிற்றுண்டி எல்லாம் ஆனது.அடுத்த வெளியீட்டில் புகைப்பட்த்துடன் மேலாளரைப்பற்றிய செய்தி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை. இரண்டு,மூன்று பத்திரிகையாளர்கள்-அவர்களும் புலனாய்பவர்கள்-கூடி விவாதித்தார்கள்.ஆதாரங்களுடன் மேலாளரிடம் பேசினார்கள்.பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மேலாளரின் மானம் காப்பாற்றப்பட்டு விட்ட்து.அவருக்கும் குடும்பம் இருக்கிறது(நிருபருக்கு இல்லையா?).புலனாய்வு நிருபர் சில நாட்கள் அலைந்த்தற்காக மட்டும் மேலாளரிம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டார். எனது நண்பர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கை நட...

சினிமா தவறென்கிறாய்

Image
சினிமா தவறென்கிறாய் அப்போது நெடுங்கதை? நாவல் திரைப்படமானதை கேட்ட்தில்லையா? பாடல் இசை தாலாட்டு நாட்டுப்புற பாடல் மேலான காதல் நான் நீ நாம் எல்லாம் தவறா இவையெல்லாம் சினிமாவில் உண்டே சிந்திப்பாயா நண்பனே? சினிமா தவறா? அதில் ஒரு பகுதியா?

நெஞ்செரிச்சல்-அவசர வாழ்வின் கொடை

Image
வழியில் கிடைத்த எதாவதொன்றை விழுங்கி விட்டு பறக்கும் இன்றைய அவசர யுகத்தில் இழந்தவற்றுள் முக்கியமானது நமது உடல்நலம்.ஆம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.உணவுக் குழாய் சுவர்களை அரிக்கும் ஒரு உடல் நலக்கோளாறு நெஞ்செரிச்சல்.உணவு செல்லும் பாதையில் அமிலம் பொங்கும் அவஸ்தை. வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் உணவுப்பாதையில் நெஞ்சு வரை பயணித்து இதயத்தில் பிரச்சனையா என்று கவலைப்படும் அளவுக்கு வாட்டும்.உண்மையில் நெஞ்சுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.அப்பகுதியில் எரிச்சலும்,அரிக்கும் உணர்வு ஏற்படும் அவ்வளவே. வழக்கமாக செரிமானம் ஆகாத உணவுகள்,-இவை பெரும்பாலும் மசாலா,துரித உணவுகள்-இக்கோளாறை உருவாக்கும்.புகை பிடித்தல்,மது,அளவுக்கதிகமான உணவு,கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள்,அதிக எடை போன்றவையும் காரணம்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாத உண்வுகளை உண்பதாலும் ஏற்படும். பொதுவாக, தொண்டை,நெஞ்சு பகுதியில் எரிச்சல்,வயிற்றின் உணவு நுழையும் பகுதியில் வலி,வாந்தி,குமட்டல்,இருமல்,உடலின் பின் பகுதியில் கூட சிலருக்கு வலி இருக்கலாம்.இத்தகைய அறிகுறிகள் இருக்குமானால் உடனே கவனிக்க வேண்டும். நெஞ்செர...

சிறுத்தை-விகடனும் நானும்

Image
வாரப்பத்திரிக்கை படிக்கத் தொடங்கிய நாளில் இருந்து ஆனந்த விகடனின் வாசகன் நான்.அதிக திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை.விகடனின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் பெரும்பாலான படங்களுக்கு சென்றிருக்கிறேன்.நானும் பிளாக்கில் எழுதும் முயற்சியை சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறேன். பொங்கலில் நேரம் கிடைத்த்தால் சிறுத்தை படம் பார்த்தேன்.எனக்கு பட்ட்தை நான்கு வரி எழுதி வைத்தேன்.விகடன் விமர்சனத்தோடு எனது வரிகளை ஒப்பிட்டு பார்த்த்தன் விளைவு இது. விகடன்: ஊரையே மிரட்டும் ரௌடிகள்,ஒடுங்கி வாழும் மக்கள் என 18-ம் நூற்றாண்டு பழங்கஞ்சியை,பட்டாக்கத்தி,வெட்டுக்குத்து மசாலா பூசிப் படைத்திருக்கிறார். நான்: ஒரே ஓர் ஊர் .அதில் ஒரு வில்லன் , அவனுடைய தம்பி , மகன் எல்லாம் வில்லன்கள் , அவர்களுடைய அட்டூழியங்கள் , கஞ்சா , மந்திரி தொடர்பு , அடி , உதை , அவனுக்கு பயந்த மக்கள் , வில்லன் வீட்டில் ஒருகுத்துப்பாட்டு , நேர்மையான போலிஸ் இதெல்லாம் இன்னும் குழந்தைகள் தியேட்டரில் பார்த்திருக்க மாட்டார...

தரமான பொருளுக்கான இந்தியக்கனவு

Image
நாம் கொடுக்கும் பணத்திற்கு தரமான பொருள்,சேவை கிடைக்கவேண்டும் என்று கருதுகிறோம்.ஆனால்,எடைகுறைவு, கலப்படம்,சேவைக்குறைபாடு,முறை யற்ற வர்த்தகம்,ஏமாற்றி பொருளை தலையில் கட்டுவது போன்றவை நமது இன்றைய அவலங்கள்.தற்போதைய நுகர்வோர் கலாச்சாரத்தில் பெருமளவிலான தொல்லைகள் சந்திக்க நேரிடுகிறது.நுகர்வோர் என்ற சொல் பணம் கொடுத்து பொருளை,சேவையை பெறுபவரை குறிக்கிறது.சாதாரண குடிமகன் முதல் ஜனாதிபதி வரை இதில் அடக்கம். வங்கியில்,பேருந்தில்,ரயிலில், வர்த்தக நிறுவனங்களில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை களைய முடியும்.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அதற்கு உதவுகிறது.ஒரு பொருளை வாங்கினீர்கள்.அதில் குறையிருப்பதாக கண்டறிந்தால் குறைகளை நீக்கித்தருமாறு அல்லது மாற்றித்தருமாறு கேட்க உங்களுக்கு உரிமை இருக்கிறது.அவர்கள் மறுத்துவிட்டால் நுகர்வோர் நீதி மன்றம் செல்ல முடியும்.மன உளைச்சலுக்கும் இழப்பீடு கோர முடியும். இந்தியாவில் நுகர்வோருக்கு எதிரான நடப...

சிறுத்தை -ரீமேக் மிமிக்ரி

Image
ஒரே ஓர் ஊர் .அதில் ஒரு வில்லன்,அவனுடைய தம்பி,மகன் எல்லாம் வில்லன்கள் ,அவர்களுடைய அட்டூழியங்கள்,கஞ்சா,மந்திரி தொடர்பு,அடி,உதை,அவனுக்கு பயந்த மக்கள்,வில்லன் வீட்டில் ஒருகுத்துப்பாட்டு ,நேர்மையான போலிஸ் இதெல்லாம் இன்னும் குழந்தைகள் தியேட்டரில் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது தமிழ் சினிமா நகைச்சுவைக்கு சந்தான யுகம் போல் தோன்றுகிறது.குரு உச்சத்தில் இருக்கும் நேரம்.படத்தை காமெடிதான் கொஞ்ச நாளைக்கு ஓடவைக்கும்.கொடுக்கும் காசுக்கு ராக்கெட் ராஜா கார்த்தியும்,சந்தானமும்தான் புண்ணியம் கட்டிகொள்கிறார்கள். விறுவிறுப்பான படமாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் முன்பே பார்த்துவிட்டது போல தோன்றிக்கொண்டே இருக்கிறது.தமன்னாவை கதாநாயகி வேண்டும் என்பதற்காவும்,பாட்டுக்காகவும், இடுப்புக்காகவும்,கிளைமாக்சுக் க்காகவும் புக் செய்திருக்கிறார்கள். க...

காமராஜர், எம்.ஜி.ஆர்.வழியில் ..........

காமராஜரும்,எம்.ஜி.ஆரும் எளிய,ஏழை உள்ளங்களிலும் புகழ் பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.அவர்களது மங்காத புகழுக்கு காரணம் அனைவரும் அறிந்ததுதான்.அவர்களது தொண்டுள்ளத்தில் முக்கியமான திட்டம் உணவு.காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்.பசித்த வயிறுகளை கவனத்தில் கொண்டோர் என்றும் இறப்பதில்லை.அதுவும் குழந்தைகளின் பசி என்பது கொடூரமான வெளியில் வராத நெருப்பு.பசி வந்திட பத்தும் பறந்து போக கல்வி எங்கே நிற்கும்? இந்து மத சடங்குகளில் ,பரிகாரங்களில் அன்னதானம் முதலிடத்தை வகிக்கிறது.கோயில் சந்நிதியில் அன்னதானம் செய்வதாக கடவுளிடம் பேரம் பேசுபவர்கள் (வேண்டுதல்) நம்மிடையே உண்டு.பல தோஷ நிவர்த்திகளுக்கு அன்னதானம் பரிந்துரைக்கப்படுகிறது.மற்றவர் களுக்கு உணவளிப்பது நமது பண்பாட்டில் கலந்திருக்கும் ஒரு செயல். பெங்களூரு பதிவர் சந்திப்பு பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்.அக்ஷய பாத்திரம் என்பது பற்றிய பொருள் என்ன எ...

திருப்பூர் குமரன்

Image
உனது செந்நிறக் குருதியால் புனிதமடைந்தது நம் தாய்மண் கொடிக்காக இன்னுயிர் மண்ணுக்காக ரத்தம் பட்டொளிவீசி பறக்கிறது நம் தேசியக்கொடி இன்று உன் புகழைப் பரப்ப புவியில் காற்றுள்ளவரை உன் பெயரை ஒலித்துக்கொண்டிருக்கும் நீ தாங்கிய கொடி கருப்பாயி ஈன்ற மகன் காலத்தை வென்ற நாளில் வணங்குகிறேன். (நேற்று எழுதியது )

IndiBlogger சந்திப்பில் தமிழ் பிளாக்கர்ஸ் ராக்!

Image
பெங்களூருவில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு IndiBlogger-ல் இருந்து மெயில் வந்திருந்தது.ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் எனக்கு இரண்டு மணி நேர பயணம்தான் என்பதாலும் கலந்து கொள்ள முடிவுசெய்து பதிவு செய்தேன்.ஈரோட்டில் நடைபெற்ற சந்திப்பு போலல்ல இது.ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அக்ஷய பாத்ரா என்னும் தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதற்கான சந்திப்பு.ஏற்பாடு அனைத்தும் பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலுடன் இணைந்த --அந்நிறுவனமே.இது ஐந்தாவது சந்திப்பு என்றார்கள். கோவிலின் உள்ளே உள்ள அரங்கில்தான் சந்திப்பு.வெளியிலிருந்து பார்க்கும்போதே தமிழர்களின் உழைப்பில் உருவான பிரமாண்டம் என்பது நினைவுக்கு வந்தது.பிரபலமான அந்த ஆலயத்தின் கட்டுமான பணியாளர்கள் அனைவரும் தமிழர்களே! பல ஆண்டுகள் எங்கள் ஊரிலும்,சுற்றியுள்ள ஊரைச்சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்ததுஅந்தக்கோயில்.வாயிலில் டி-சர்ட் அடையாளத்தோடு நின்றிருந்தவர் உதவியுடன் அரங்கத்தை அடைந்தேன்.இளம்பெண்கள் இரண்டுபேர் என்னு...

பாலியல் மூடநம்பிக்கைகள் -18+

Image
அறிவியல் சார்ந்து நிரூபிக்க முடியாத நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்கிறோம். மதம் சார்ந்த சில சடங்குகள்,நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக அறியப்பட்டுள்ளன.அவற்றை ஒழிப்பதற்கு இயக்கங்கள் தோன்றின.தொடர்ந்து விவாதங்களும் இருந்து வருகின்றன.பாலியல் சார்ந்த நம்பிக்கைகள் மட்டும் இன்னமும் ரகசியமாகவே சமூகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கலாம். பாலியல் தொடர்பான சந்தேகங்கள் யாருக்கும் இல்லையா?அந்த சந்தேகங்களை எப்படி தீர்த்துக்கொள்கிறான்?.இன்டர்நெட்டில் அதிகமாக தேடப்படும் பொருள் செக்ஸ் என்று அறிகிறோம்.எதை தேடிக்கொண்டிருக்கிறான்?"சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை"-என்றால் என்ன தெரிந்துகொள்ள இத்தனை ஆவல்?இது தொடர்பாக நண்பர்களும்,சுற்றியிருப்பவர்களும் தரும் நம்பிக்கைகள்தான் ஒருவனது கல்வியாக இருக்கிறது. ஒரு சிறு நகரத்தின் ஒரே தெருவில் பத்தாம் வகுப்பு வரை படித்த இரண்டு ஆண்கள்.இருபத்தைந்திலிருந்து ...

தமிழன் என்ற சொல்

Image
தமிழன் என்ற சொல் குற்ற உணர்வு தரும் சொல்லாகிவிட்டது எனக்கு இறக்கும் வரை தவிக்க வேண்டும் நெஞ்சில் குத்திய முள்ளுடன் முள்ளும் வேலியும் உடல்சுற்றி கனவில் கனவு கலைந்து தாகத்தில் நீர் அருந்தும்போது நினைவுக்கு வருகிறது உயிர் நீரும் வாய்க்காத உதிரங்கள்

மக்களின் மனங்கவர்ந்த போலி டாக்டர்கள்

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நீங்கள் அவர்களை பார்க்கலாம்.யாரோ உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு சைக்கிளில் அல்லது நவீன இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்கே வந்து ஊசி போட்டு மாத்திரையும் தருவார்.அழைத்தவுடன் வீட்டுக்கு வந்து நிற்பார்.கேட்கும் பணத்தில் கொஞ்சம் முன்னே பின்னே கொடுத்தாலும் பரவாயில்லை.அப்புறம் தருகிறேன் என்று கூட -கடன்-சொல்லிக்கொள்ளலாம்.கிரா மத்தில் இருப்பவருக்கு அவர் டாக்டர். மக்களின் மனங்கவர்ந்த இந்த டாக்டர்கள் பத்தாம் வகுப்போ அல்லது பனிரெண்டாம் வகுப்போ படித்திருப்பார்கள்.சுகாதாரத்து றையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்,பணியாற்றுபவர்கள், மருத்துவம் தொடர்பான பார்மசி,லேப் டெக்னிஷியன் படித்தவர்கள் ஆகியோர் இப்பணியை தொழிலாக கொண்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.மேற்கண் டவர்களிடம் உதவியாளராக பணியாற்றிவிட்டு தனியாக தொழில் தொடங்கி புகழ் பெற்றவர்களும் உண்டு. கிராமத்தில் -ஏன் சில சிறு நகரங்களில்-நுழைந்து விசாரித்தால் இவர்கள் ...