தமிழன் என்ற சொல்


தமிழன் என்ற சொல்

குற்ற உணர்வு தரும்

சொல்லாகிவிட்டது
எனக்கு

இறக்கும் வரை

தவிக்க வேண்டும்

நெஞ்சில் குத்திய

முள்ளுடன்

முள்ளும் வேலியும்

உடல்சுற்றி

கனவில்

கனவு கலைந்து

தாகத்தில்

நீர் அருந்தும்போது

நினைவுக்கு வருகிறது

உயிர் நீரும்

வாய்க்காத

உதிரங்கள்

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்