தமிழ்ப் பதிவுகளை காட்டமாக விமர்சித்த அரசியல் நிருபர்.


  பத்திரிகையாளர்கள் என்றால் பெரிய பெரிய ஆட்களெல்லாம் மரியாதை கொடுப்பார்கள்.சும்மா வெளிவேஷம்தான்.ஆனால் பத்திரிக்கை முதலாளிகள் மிகவும் மதிக்கும் நபர் ஏஜன்ட்.சில்லறையை இறைத்து பெருக்குவது என்பார்கள்.பத்திரிகைக்கு அது பொருந்தும்.பல ஏஜெண்டுகளிடம் பணம் வாங்குவது சாதாரண விஷயமல்ல.அப்படியெல்லாம் இல்லாமல் நல்ல(சொல்லி வைக்கிறேன்) ஏஜன்ட் ஒருவரின் கடைக்கு போனேன்.பல வருடங்களாக பழக்கம்."இவர் .....பத்திரிக்கை நிருபர் என்று அறிமுகப்படுத்தினார்.என்னை இவர் தமிழ் பிளாக்கர் என்று சொன்னார்.அற்பமான புழுவைப் பார்ப்பது போல் தோன்றியது.எந்த ரியாக்சனும் இல்லை.ஏஜண்டுக்கு ஏன் மீது கொஞ்சம் மரியாதை உண்டு என்று நினைக்கிறேன்.


                                                             ''சாருக்கு பத்திரிகை நடத்திய அனுபவம் உண்டு.''என்றார்.கையெழுத்து பத்திரிக்கை என்று நினைத்திருப்பார் போல! அவர் கண்டு கொள்ளவில்லை.நான் கேட்டேன் ''பெங்களூரு தினச்சுடர் நாளிதழில் கேள்விப்பட்டிருப்பீர்களே ,அவர்தான் லே அவுட் செய்வார்." நானும் பத்திரிக்கைஅனுபவம் உள்ளவன் என்று நம்பவேண்டுமே!(தொழில் தொடர்பாக ஒன்றும்,உள்ளூர் மாத இதழ் ஒன்றும் மூன்று நண்பர்கள் சேர்ந்து நடத்தினோம்.நண்பனின் குடும்ப சண்டையால் பத்து இதழ்களுடன்  நின்று போனது.ஓரளவு லாபம் சம்பாதித்தோம் என்பது ஆச்சர்ய விஷயம்) அப்புறம் அவர் பேசாமலே இருந்திருக்கலாம்."இப்பொது காபிபேஸ்ட் செய்கிறீர்களா?'' என்றார்.எனக்கு கோபம் வந்து விட்டது.என் முகம் மாறுவதை பார்த்தவுடன் "தமிழில் நிறைய அப்படித்தான் இருக்கிறது.''அதனால் கேட்டேன் என்றார்.என்னைப்பற்றி பெருமையாக ஏஜன்ட் சில வார்த்தைகள் சொன்னார்.உண்மையில் அவருக்கு தர்ம சங்கடம்.நான் அவருக்கு விளக்கம் தந்தேன்.

நான்: "ஆயிரக்கணக்கில் கவிதை,கதை,அரசியல்,நகைச்சுவை என்று தமிழ் விளையாடிக்கொண்டிருக்கும் இடம் அது.நீங்கள் சொல்லும் காபி பேஸ்ட் குறைவுதான். நேரமில்லாத போது ஏதாவது பதிவு போடலாம் என்று காபி பேஸ்ட் செய்வார்கள்.

அவருக்கு நம்பிக்கை வரவில்லை .


நிருபர்:" நான் சில நேரங்களில் பார்க்கிறேன் .பத்திரிகையில் இருந்து எடுத்ததுதான் இருக்கிறது என்றார்.


 நான்:"உண்மைதான் பிரபல பத்திரிகையின் கட்டுரை என்றால் பலர் படிக்கத்தான் செய்வார்கள்.நீங்கள் அதை மட்டும் பார்க்கிறீர்கள்.மருத்துவர்,IAS அதிகாரியிலிருந்து பிரபல எழுத்தாளர்கள் வரை  எழுதி வருகிறார்கள்.அருமையான ஊடகம் இது.நான் நினைத்ததை எழுதுவேன்.தேவையில்லாவிட்டால் அழித்து விடுவேன்.புதுப்பித்துக் கொள்வேன்.எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.எல்லாவற்றுக்கும் மேலாக ஒத்த கருத்துள்ள நண்பர்கள்.இதற்காகவே பதிவராக இருக்கலாம்.உலகத்தமிழர்களை வேறு எந்த ஊடகமும் ஒருங்கிணைத்த தில்லை.

நிருபர்:யார் படிக்கிறார்கள்.?சினிமாவும் காபி பேஸ்ட் டும் தான் இருக்கிறது.மற்றதையெல்லாம்  நீங்கள் எழுதி நீங்களே படித்துக்கொள்வீர்களா?



நான்:(அடப்பாவி பக்கம் இருந்து பார்த்திருப்பாரோ?)  நானும் பத்திரிக்கை படிக்கத்தொடங்கிய காலத்தில் சினிமா பற்றியே அதிகம் படித்தேன்.வாரப்பத்திரிகைகளில் மூன்று தொடர்கதை யாவது கட்டாயம் இருக்கும்.இப்போது அப்படியில்லை.மாற்றம் ஒன்றே மாறாதது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.

 அவர் மேற்கொண்டு பேசியவை இங்கே வேண்டாம்.என்னுடைய பிளாக் முகவரியும் போன் நம்பரும் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.ஒரு நாள் அவரும் வலைப்பதிவுக்கு வருவார் என்று நினைத்துக்கொண்டேன்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்