Posts

Showing posts from September, 2010

காது கொடுத்து கேளுங்கள் ;கடவுள் ஆகலாம்!

ஒருவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலான தற்கொலைகளை தடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும் தங்கள் துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாக கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாக இருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களது சிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள் சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூட வெளியே வரலாம். பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை? ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாக இருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில் இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விர...

அன்னையை போற்றுவோம் -இரண்டு

Image
கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்? நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை. பெண்ணுக்கு பதினைந்து வயது. வயதுக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது. வழக்கமாக சொல்லக்கேட்பதுண்டு,மச்சினிச்சி சூப்பர்டா ,நீ குடுத்து வச்சவன்டா.....யாரும் வீட்டில் இல்லாதபோது தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை அவளுடைய அக்காவின் கணவன் கற்பழித்தான்.ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மா மகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".கொஞ்ச நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒரு தாய் அவ்வளவுதான் தண்டனை தரமுடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள் .

பிச்சைக்காரர்கள் உழைக்கத்தயார்

கோவை மாநகராட்சியில் மன நல ஆலோசனையின் விளைவாக பிச்சைக்காரர்கள் சுமார் ஐம்பது பேர் சுய தொழில் தொடங்க முன்வந்தார்கள் - தினமலர் செய்தி . . உரிய ஆலோசனையின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது . இதன் சாதகபாதகங்களை பார்க்கும் முன்பாக மன நல ஆலோசனை பற்றி சில தகல்வல்கள் . மனிதர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுவது தான் மன நல ஆலோசனையின் நோக்கம் .பயிற்சி பெற்ற ஒருவர் தனி மனிதனுக்கோ குழுக்களுக்கோ ஆலோசனை வழங்கலாம் .நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்றும் அழைக்கப்படுகிறது. இதே செய்தியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறும்போது ,''யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளகூடிய பக்குவத்தில் ஒருவர் கூட இல்லை என்கிறார் ''.மிகச்சரி .ஒருவருக்கு அறிவுரை கூறும்போது நீங்கள் மேலானவர்களாகவும் பெறுபவர்கள் கீழேயும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. மனிதன் எது இல்லையென...

அன்னையை போற்றுவோம் -ஒன்று

1. பட்டம் பெற்ற ஒரு பெண்ணை விலை உயர்ந்த டி.வி,வாசிங் மெஷின்,சகல வசதிகளோடும் உள்ள ஒரு வீட்டிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணமாகி ஆறுமாதம் கழித்து மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள் .அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தது .சிறு நீர் வெளியேறுவது தெரியவில்லை.நனைந்தபின்னர் வெகு நேரம் கழித்து தெரியவரும். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீர் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்தார். விசாரித்தபோது தாய்வீட்டில் உள்ளபோது அத்தகைய தொந்தரவுகள் எதுவும் இல்லை என்றார். கணவன் வீட்டில் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரணம் என்று முடிவு செய்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்தார்.மனதில் ஏற்படும் அழுத்தங்கள் அளவு மீறும்போது உடல் மீது வீசிவிடுகிறது என்கிறது உளவியல் .உடலில் ஏற்படும் பல நோய்கள் மனம் தொடர்புடையதாக இருக்கலாம். கணவன் , மாமியார் ,நாத்தனார் ஆகியோர் செய்யும் கொடுமைகளை கொட்டிய பின்னர் அவரது தாய்கூறினார், ''எங்கள் வீட்டுக்கே வந்து விடுமாறு கூறுகிறேன் ,ஆனால் வரமாட்டேன் என்கிறாள் ''."என் தங்கை வேறு இருக்கிறாள்,அவளு...