Posts

Showing posts from November, 2013

தங்கநகை வாங்கப்போகிறீர்களா?

Image
ஹால்மார்க் என்பது ஆபரணத்தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வ முத்திரை.நகைகளின் தரத்தை உறுதிசெய்யும்பொருட்டு இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS) 2000 ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் வாங்குவதன் மூலம் மாற்றுக்குறைவான நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்கலாம். ஹால்மார்க் தரமுத்திரைத்திட்டம் கட்டாயம் இல்லை.விண்ணப்பிக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். (BIS Act 1986) சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள்தான்.நாம்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் சிறியதாக இருந்தாலும் அதில் ஐந்து முத்திரைகள் இருக்கும்.1.பி.ஐ.எஸ் முத்திரை,2.நேர்த்தித்தன்மை முத்திரை,3.அஸேயிங்& ஹால்மார்க் மையத்தின் முத்திரை,4.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு.5.நகை விற்பனையாளர் முத்திரை. ஹால்மார்க் உரிமம் பெற்ற விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி வைத்திருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.நாம் நகை வாங்கும்போது பூதக்கண்ணாடி கேட்டுவாங்கி 5 முத்திரைகளையும் சரிபார்த்து வாங்கவேண்டும். நகைகளில் 916...

மருத்துவமுறைகளில் சிறந்தது எது?

Image
அடிச்சுப்போட்ட மாதிரி வலிக்கிறது என்பார்கள்.குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் உடல் முழுக்க வலி இருக்கும்.சோர்வாக உணர்வார்கள்.விசாரித்துப்பார்த்தால் சரியான தூக்கம் இருக்காது,பசி இல்லை என்று சொல்வார்கள்.மேலும்பேசும்போது வீட்டில்,அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கும்.எதிர்மறையான எண்ணங்களில் சிக்கியிருப்பார்கள். மன ம் அமைதியற்று இருக்கும் நிலையில் சுவாசம் சீராக இருப்பதில்லை.செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது முழுமையாக இருக்காது.பசியின்மை காரணமாக சரியாக சாப்பிட்டிருக்கமாட்டார்.அதனால் ஊட்டச்சத்துக்களும் உடலுக்குக் கிடைத்திருக்காது.அவருக்குப்பிரச்சினை தீர்ந்தால் சரியாகிவிடும்.நேர்மறையாக சிந்திக்கத்துவங்கினால் வலிகள் மறைந்துவிடக்கூடும். நான் சந்தித்த ஒருவர் வலிக்காக கடையில் மருந்துவாங்கி சாப்பிட்டிருந்தார்.வலி நிவாரணிகள் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பது அவருக்குத்தெரியாது.தூக்கத்தை வரவழைக்க தூக்க மாத்திரைகளும் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.படித்த மருத்துவர் ஒருவரும் வலி நிவாரணியைத்தான் பரிந்துரைத்தார்.கூடவே கொஞ்சம அமிலத்தைக்குறைக்கும் மருந்துகளையும் சேர்த்திருந்தார். படித்த மருத்துவர்களை விட போல...

ஆரோக்கியம் காத்த நிலக்கடலை

Image
பலகாரம் செய்வதெல்லாம் கடலைஎண்ணெயில்தான் இருக்கும்.தினசரி சமையலுக்கும் தாளிக்கவும் தான்.தலைக்குவைத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய்,தலைதேய்த்துக்குளிக்க நல்லெண்ணெய்.வேறு எண்ணெய்யைப்பற்றி கேள்விப்பட்ட்தில்லை.நிறைமாத கர்ப்பிணிகள் இருந்தால் ஆமணக்கு எண்ணெய் தயாராக இருக்கும்.அதிலும் சிற்றாமணக்கு என்றால் கொஞ்சம் சிறப்பு. செக்குவைத்து எண்ணெய் எடுத்துத்தர ஒரு சாதி உண்டு.பெரும்பாலும் கிராமத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெய்தான்.என்னுடைய சிறுவயதிலேயே செக்கெல்லாம் காணாமல் போய்விட்டது.அப்புறம் எந்திரம் வந்துவிட்டது.பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தபோது கடலைஎண்ணெய் தவிர மற்றவை பிரபலமாக இருந்தது.அது ஆரோக்கியத்திற்கு கேடாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தோலை நீக்காமல் சாப்பிடுங்கள் தர்மபுரி பகுதியில் கடலைக்காய் என்று சொல்வோம்.பாதையோரம் நிலம் இருந்தால் காவல் இருந்தேதீரவேண்டும்.வழியில் போகும்போது செடியைப்பிடுங்கி விடுவார்கள்.நிலக்கடலை விளைச்சல்தான் அந்த ஆண்டின் வளத்தைத் தீர்மானிக்கும்.மூட்டையை அடுக்கிவைத்துக்கொண்டு விலையைக்கவனித்துக் கொண்டிருப்பார்கள்.செடியைப்பிடுங்கி எத்தனை காய் இருக்கிறதென்று பார்த்...

ஆங்கிலப்புத்தகம் எதிர் தமிழ்ப்புத்தகம்

Image
அவர் ஆங்கிலப்பத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.மூன்று பாகங்கள் அடங்கிய நாவலில் இரண்டாவது பாகம் படித்துக்கொண்டிருந்தார்.அவருடைய அலுவலர் அறிமுகப்படுத்தியதாக சொன்னார்.அவருடைய பையனும் ஆங்கில நாவல்களை படிக்க ஆரம்பித்திருக்கிறான்.தமிழ்ப்புத்தகங்கள் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். சுஜாதா,பாலகுமாரன் ஜெயகாந்தன் போன்றவர்களைப் படித்திருப்பதாக சொன்னார்.இப்போது ஆங்கிலப்பத்தகங்களை விரும்பிப்படிக்கிறார்.அவருக்கும் பையனுக்கும்   நண்பர்கள் அந்தப்புத்தகங்களை பரிந்துரைத்தார்கள்.வாசிப்புப்பழக்கம் அப்படித்தான்உருவாகிவிடுகிறது.குடும்பத்திலோ,நண்பர்களிடமிருந்தோ தொற்றிக்கொள்கிறது. பத்தாம்வகுப்பு படிக்கும்போது எனக்கு தினமணி அறிமுகமானது.பொதுத்தேர்வு விடுமுறையில் நண்பன் வீட்டுக்குப்போயிருந்தபோது கல்கி இதழைப்படித்தேன்.நண்பனின் அண்ணன் தொடராக வரும் கல்கியின் நாவலைக்கிழித்து பைண்டிங் செய்து வைத்திருந்தார்.நான் ஆனந்தவிகடன் வாங்க ஆரம்பித்தேன்.எனக்கும் தொடர்களைக் கிழித்துவைக்கும் பழக்கம் உருவாகிவிட்டது. ஆனந்தவிகடனில் கிரா வின் கோபல்லபுரத்துமக்கள் தொடராக வந்தது.கிழித்துவைத்து தைத்துவிட்டேனே தவிர என் வயதுக...