Posts

Showing posts from October, 2013

தெருக்கூத்து நினைவுகள்.

Image
சுத்தம் சுகாதாரம் எல்லாம் யாருக்குத்தெரியும்? நான்குபுறமும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கிற இடமாக இருக்கும்.மண்ணில் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும்.டவுசர் கால நினைவுகள் அவை.தெருக்கூத்து நடப்பதாக சொல்லிவிட்டால் இரவு சாப்பாட்டில் கூட மனம் இருக்காது.அரிதாரம் பூச நான்குபுறமும் தென்னை ஓலை கட்டி விளக்குபோட்டால் போதும்.முதல் ஆளாக இடம்பிடித்துவிடுவோம்.கூத்து துவங்குவதற்கு முன்பாகவே தூங்கிப்போயிருப்போம். எங்கள் கிராமத்தில் நாடகம் என்று சொல்வார்கள்.கொஞ்சம் வளர்ந்து பெரியவகுப்பு படிக்கப்போனபிறகு பபூன் வருகைக்காக தூங்காமல் காத்திருப்போம்.தெருக்கூத்து என்பது மகாபாரதம்,இராமாயணத்தில் ஏதேனும் ஒருபகுதி.அத்தை,பாட்டி போன்றவர்களுக்கு இந்தக்கதையெல்லாம் அற்புதமாகத் தெரியும்.கூத்துக்கு முன்பாகவே கதை சொல்லி ஆர்வத்தைக்கிளறிவிடுவார்கள். கூத்துக்கு வாத்தியார் என்று உண்டு.அவர்தான் பயிற்சி கொடுத்து தயார் செய்வார்.ஒவ்வொரு கூத்துக்கென்று தனிதனியாக நோட்டுக்களை வைத்திருப்பார்.ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனியாக வேறு எழுதிக்கொடுப்பார்கள்.புதிய்தாக சேர்ந்தவர் மனப்பாடம் செய்து கொண்டிருப்பார்.ஏதாவது பகுதி மறந்துவிட்டால் வாத...

வெள்ளாட்டுக்கறியும் தீபாவளியும்

Image
வெள்ளாட்டுக்கறிதான் மதிப்பு மிக்கதாக இருந்துவருகிறது.சுவை மட்டும் இதற்கு காரணமல்ல! கிராமப்புறங்களில் தோஷம் இல்லாதது என்றநம்பிக்கை இருந்து வருகிறது.உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடுவார்கள்.பல இடங்களில் தீபாவளிக்கு கறி சீட்டு பிரபலமாக இருக்கிறது.வெள்ளாட்டுக்கறி என்று சொன்னால் கலந்துகொள்பவர்கள் அதிகம். காந்தி வெள்ளாட்டுப்பாலைக் குடித்து வந்தார்.வெள்ளாட்டுக்கறியில் கொலஸ்ட்ரால் பயம் இல்லை.மற்ற கறிகளை ஒப்பிடும்போது கொழுப்பு மிகவும் குறைவு.வீட்டில் அரைக்கும் மசாலாவில் சேர்க்கப்படும் பொருட்களே இருக்கும் கொழுப்பையும் சமன்படுத்திவிடும்.அதிகம் பயப்படாமல் சாப்பிடத்தேர்ந்தெடுக்கலாம். இந்த ஆண்டு பலருக்கு கறி இல்லாத தீபாவளியாக அமைந்துவிட்டது.பல குடும்பங்களில் கௌரி விரதம் முடியும்வரை அசைவம் சாப்பிடமாட்டார்கள்.அமாவாசை அன்று ஞாயிற்றுக்கிழமைதான் விரதம் வருகிறது.அடுத்தநாள் பலருக்கு அலுவலகம் இருக்கும்.இந்த விரதம்தான் பலரை நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரச்செய்கிறது. தீபாவளி சீட்டு என்று இனிப்பும் காரமும் தருகிறார்கள்.ஆனால் விரதத்தின் சிறப்பு இனிப்பாக அதிரசம் தயாரிப்பார்கள்.படைக்கமட்டும் நெய்யில் ...

இரயில் பயணத்தில்.....

Image
பார்க்கச்சலிக்காத விஷயங்களில் இரயிலும் ஒன்று.பேருந்துப்பயணத்தை ஒப்பிடும்போது இரயில் உடல் சோர்வு தராமல் கொண்டு சேர்க்கிறது.எங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டரில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருக்கிறது.ஆடி பதினெட்டு என்றால் வழக்கமாகச் செல்வதுண்டு.சுமார் பாதிதூரத்தை இரயில்பாதை வழியே நடந்துசெல்வது வழக்கம்.அப்போது இத்தனை இரயில் இல்லை.இரயிலை பார்ப்பது சந்தோஷமாக இருக்கும். கடந்தவாரம் ஆம்பூரிலிருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்தேன்.முதல் வேலையாக இரண்டாம்வகுப்பில் காலியிடத்தைக் கேட்டோம்.வாலாஜாவில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று சீட்டு வழங்கினார்கள்.அதுவரை நின்றுகொண்டுதான் பயணம் செய்யவேண்டும்.பக்கத்தில் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒருகுடும்பம் காத்திருந்தது. மூன்றுபேர் அமரும் இருக்கையில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள்.குழந்தைகளுக்கு ஆறு,நான்கு வயது இருக்கக்கூடும்.கணவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.தாயும் இரண்டு குழந்தைகளும் உள்ள இருக்கையில் இன்னொருவர் அமரமுடியும்.கையில் குழந்தை வைத்திருந்தபெண் உட்கார அனுமதி கேட்டார்.அவரது முயற்சி பலிக்கவில்லை.அந்தப்பெண்மணியின் ப...

சென்னை பெருநகர ஆட்டோக்கள்.

Image
கிருஷ்ணகிரியில் ஐந்து ரூபாயில் பிரதான சாலையில் ஆட்டோவில் பயணிக்க முடியும்.இருபதாண்டுகளுக்கு மேலாகஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் போலத்தான்.ஷேர் ஆட்டோக்களுக்கு முன்னோடி என்றுகூட சொல்லலாம்.மூன்று பேர் சேர்ந்தால் எங்கே இறங்கினாலும் ஐந்துரூபாய்.சில நேரங்களில் மூன்று பேர் சேரும்வரை காத்திருக்க நேர்ந்தாலும் நமக்கு வசதி.  வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது.அதிகம் ஆட்டோவை பயன்படுத்த வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்.மழை தூறிக்கொண் டிருக்கும்போது பேருந்துக்கு காத்து நிற்பதைவிட ஆட்டோவில் போகலாம் என்றிருக்கும்.பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் பொருத்திவிட்டார்கள்.மீட்டர் பொருத்திய பின்னர் என்னதான் நடக்கிறது?  சென்ட்ரலில் இறங்கி ஆட்டோ கேட்டேன்.வழக்கமான பல்லவியாக ஒரு தொகையைச் சொன்னார்."மீட்டர் பொருத்திட்டீங்கதானே?" "நைட் டைம் சார்" "இப்போதுதான் ஒன்பது மணி ஆகிறது" என்றேன். கொஞ்சம் அரை மனதுடன் மீட்டர் போட ஒப்புக்கொண்டு கிளம்பினார். இன்னொருவர் "வழக்கமாக நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் சார்"என்றார்.முன்பெல்லாம் பேரம்பேசி போனதைவிட இப்போது குறைவாகத்தான் ஆகும்.திருத்தப்பட்ட மீட்ட...

மாணவர்கள் கையில் கத்தி.

Image
கொடூரமான குற்றங்கள் நிகழும்போது வழக்கமாக என்ன சொல்வார்கள்? மோசமான படுகொலை நடந்துவிட்டால்?அவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்பார்கள்.கடுமையான தணடனை கொடுத்தால் மற்றவர்களுக்கு அந்த எண்ணம் வராது என்பது பொதுப்புத்தி.ஆனால் இப்போது கல்லூரி முதல்வர் கொலையில் குரல்கள் மாறியிருக்கின்றன.ஆனந்தவிகடன் கவுன்சிலிங் மையங்களை இயக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதியிருக்கிறது. தண்டனைக்கான குரல்கள் பலவீனமாகி வேறு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.இது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.தண்டனையை விட தனிமனித,சமூகக்காரணிகளை கண்டறியும்போது நாம் தீர்வை நோக்கிச் செல்கிறோம்.ஆலோசனை பற்றிஇரண்டு ஆண்டுகளாக பல்வேறு பதிவுகளில் நான் சொல்லிவந்ததை வாசகர்கள் கவனித்திருக்கமுடியும்.ஆனால் தண்டனைகளும் அவசியம்தான். கொலை அதிகம் கவனிக்கப்பட்டுவிடுகிறது.ஆனால் மாணவ்ர்களின் தற்கொலைகள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. கோவை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை நாளிதழில் போட்டிருந்தார்கள் . தற்கொலை பற்றி பரவலாக இப்படி சொல்வார்கள், மற்றவர்களைக் கொல்ல முடியாதபோது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.மாணவர்கள் விஷயத்தில் இது உண்மையாக இருக...