எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்.
இன்னும் ஓராண்டு கழிகிறது.நாட்காட்டி மாற்றுகிறோம்.இங்கே எதற்காக பிறந்திருக்கிறோ என்று தெரியாது.மனிதனுக்கு ஆகச் சிறந்த வேலை நாட்களைக் கொல்வது என்று ஆகிவிட்ட்து.ஒவ்வொரு நாளும் முடியும்போது நம்மால் பலன் பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பதை சிந்திப்பதுண்டா? போகட்டும்.ஒரு வருட்த்தில் அப்படி ஏதாவது செய்திருக்கிறோமா? இன்னொருவனை முந்துவது பற்றி,வீழ்த்துவது பற்றி மனிதன் யோசிக்கிறான்.ஏமாற்றி பணம் ஈட்டுவது பற்றி,பொய்,வஞ்சகம்,கீழ்த்தரமான தந்திரங்கள்,சக மனிதன் மீது வெறுப்பு இன்னும் இன்னும் மனதில் குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறான்.குப்பை அழுகி நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது.தானும் அமைதி இழந்து அடுத்தவனையும் கெடுக்கிறான். ...