Posts

Showing posts from February, 2011

கன்னிப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வாலிப பேய்.

Image
                               வயசுப் பெண் என்றால் தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.திருத்தமாக உடை உடுத்தி,யாராவது பார்த்தால் மனைவியாகவோ,மருமகளாகவோ கொள்ள மனம் வரவேண்டும்.அந்த பெண் அப்படியில்லை.சமீப காலமாக சரியாக சாப்பிடுவதில்லை.தூங்குவதில்லை.எந்த வேலை சொன்னாலும் ஈடுபாட்டுடன் செய்வதில்லை.                               அப் பெண்ணின் தாய்க்கு பாட்டி யோசனை கூறினாள். ’’ போய் அந்த சாமியிடம் குறி கேட்டுவிட்டு வா ”. அம்மா குறி கேட்டு விட்டு வந்து சொன்னது: ’’ அவளுக்கு பேய் பிடித்திருக்கிறதாம் ” இரவு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தார்கள்.பேய் ஓட்டுபவனை அழைத்து வர வேண்டும்.அண்ணனுக்கு தெரியும்.            ...

காலில் மாட்டிக் கொண்ட பெண் உடைகள்.

Image
காதலிக்கும் பெண் பயன்படுத்தும் பொருட்களை சேமித்து வைக்கும் காதலர்களை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.உடைகளை திருடுபவர்கள் கூட உண்டு. Fetishism   என்று முறையற்ற பழக்கம் ஒன்று இருக்கிறது.பெண்ணின் உடைகள்,பொருட்கள் போன்றவை அவர்களுக்கு பாலுறவு திருப்தியைத் தந்துவிடும்.                                                                            உடன் பணியாற்றும் நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன்.அவனே சமைப்பதுண்டு.சுவையாக சமைப்பதில் கை தேர்ந்தவன்.நான் விருந்தாளியாக போய்விட்டால் சிறப்பு உணவுகள் இருக்கும்.அன்று வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அவனுடைய அறையிலேயே தூங்கிவிட்டேன்.    ...

நீங்கள் கவலைப்படுவதுண்டா? படியுங்கள்!

Image
நண்பர் ஜனா,எனது முந்தைய பதிவுக்கு இட்ட கருத்துரைஇது. ” சமூகத்தை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் அதே வேளை அதிகம் கவலையும் படுகின்றீர்கள் என்பது புரிகிறது ” என் மீதுள்ள மரியாதையால் இதைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வலைப்பதிவின் தலைப்புக்கு கீழே உள்ள வரிகளைப் படிக்கவும்.ஆம்.கவலையற்றிருத்தலே வீடு; களியே அமிழ்தம்.மகாகவி பாரதியின் சத்திய வார்த்தைகள்.எனது சமூகம் சார்ந்த மதிப்பீடுகள் பாரதி உருவாக்கியவை. ஜனா சொல்வது சரி.சமூகத்தை உன்னிப்பாக கவனிக்கிறேன்.ஆமாம்.மனிதர்களையும்,முகங்களையும்,கை,கால்களையும்,நடவடிக்கைகளையும் கவனிப்பதும் அசை போடுவதும் எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.பார்த்த்தையும்,கேட்ட்தையும்,என்னை பாதித்தவற்றையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நகைச்சுவை படித்தால் சிரிக்கலாம்.இறுக்கம் குறைந்து மனம் லேசாகும்.தொடர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க சிலதை கூட்டவோ,குறைக்கவோ வேண்டியிருக்கிறது.அது என்னென்ன என்பதை எனக்கு தெரிந்த்தை சொல்கிறேன். ...

பீதியைக் கிளப்பும் பெற்றோர்கள்

Image
குழந்தைகளைப் பற்றி அவர்களது பெற்றோர் தவிர வேறு யார் கவலைப்படுவார்கள்? ஆசிரியர்களுக்கு அக்கறை இருக்கலாம்.தனது பாட்த்தில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டுமென்று!தற்போது தேர்வுகள் வந்து விட்ட்து.பாழாய்ப்போன கிரிக்கெட்டும்தான். பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு மாணவன் வாழ்விலும் வகிக்கும் முக்கியத்துவம் நமக்கு தெரியும். தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனுடனும்,அதிக கவலையுடனும் இருக்கும் நேரமிது. தங்களால் முடியாமல் போன கனவுகளையும் இனி மீதமுள்ள ஆசைகளையும் மகனோ,மகளோ நிறைவேற்றப்போகிறார்கள் என்ற எண்ணத்துடனே புதிய மாற்றத்திற்கும் தயாராக வேண்டும்.வெளியூருக்கு படிக்க அனுப்ப வேண்டியிருக்கும்,பணம் தயார் செய்ய வேண்டும். பெற்றோர்களின் கவலையும் எதிர்பார்ப்புகளும் நியாயமானவை.அதிகப்படியான ஆர்வங்கள் எதிர் விளைவையும் ஏற்படுத்தக் கூடும்.நான் அறிந்த சம்பவம் ஒன்றை கீழே தருகிறேன்.மனதில் கொண்டு மற்றவர்களுக்கும் சொல்லுங...